தேசிய அளவிலான வளரி விளையாட்டு- வேலைவாய்ப்பு இட ஒரு வீட்டில் சேர்க்க வேண்டும் என பயிற்சியாளர்கள் வேதனை!
1015 views
Subscribe கோவை videosகோவையில் தற்காப்பு கலைகளை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்ற தேசிய அளவிலான வளரி கலையின் விளையாட்டு முகாமில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழர்கள் போரில் எதிரிகளை வீழ்த்த சிலம்பம், வாள்சண்டை, வளரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயன்படுத்தினர்.தற்போது வளரி உள்ளிட்ட போர்க்கலைகள் அழிந்து வருகின்றன.அழிந்து வரும் வளரி கலையை மீட்கும் விதமாக இந்திய வளரி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆறாவது தேசிய அளவிலான வளரி கலை குறித்த பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது. இதில் , குஜராத், பீகார், ஆந்திரா,கர்நாடகா,கேரளா, என பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,தமிழகத்தில் திருச்சி,கோவை,மதுரை,தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வளரி கலை விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்..பயிற்சி முகாமில்,வளரி விளையாட்டு கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், மற்றும் அது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.இது குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,பாரம்பரிய தமிழர் கலையான வளரியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு, அவற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து,வருவதாகவும், குறிப்பாக, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்துள்ளது போல வளரி கலையையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் இந்த கோரிக்கையை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.