எம்ஜிஆர் மார்க்கெட் சுமைதூக்குவோர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
1036 views
Subscribe கோவை videosஅடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஜிஆர் மார்க்கெட் சுமைதூக்குவோர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்ஜிஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஜிஆர் மார்க்கெட் சுமைதூக்குவோர் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் எம்ஜிஆர் மொத்த காய்கனி மண்டியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், மழை நீர் வடிகாலை அவ்வப்போது சீரமைத்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கான்கிரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும், உணவு அருந்துவதற்கும் உடை மாற்றுவதற்கும் பொருட்களை பத்திரமாக பாதுகாத்திடவும் காலியிடம் ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கை மனு நலச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் இந்த கோரிக்கை மனு கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை ஆணையாளர், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.