சர்வதேச அளவிலான கராத்தே போட்டி-தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்கள்
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இரு பிரிவிகளிலும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த 28 ஆம் தேதி சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெற்றன..இதில் சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இளம் வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்தியாவிலிருந்து, தமிழ்நாடு,குஜராத்,ஆந்திர,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில்,தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த மை கராத்தே பள்ளியை சேர்ந்த யாஷா,தேவதர்ஷினி,கோபாலகிருஷ்ணன் ஆகிய மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.கட்டா,குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,வெளிநநாடுகளை சேர்ந்த வீரர்களுடன் மோதி,இரண்டு மாணவிகள் மற்றும் மாணவன் ஆகிய மூன்று பேரும் முறையே மூன்று தங்கப்பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலபதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.இந்நிலையில் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளை பெற்றோர்கள்,மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பதக்கம் வென்ற மாணவ,மாணவிகள் கூறுகையில் இது போன்று வரும் காலங்களில் தொடர் வெற்றி பெற்று இந்தியாவிற்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க உள்ளதாக தெரிவித்தனர்..coimbatoreTimesXP TamilUpdated: 2 Jun 2023, 10:41 am