மண் துகள்கள் நிறைந்த குடிநீர் மாதம் இருமுறை மட்டுமே வருகிறது-பொதுமக்கள் அவதி!
1053 views
Subscribe கோவை videosகோவை மாநகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது.குறிப்பாக கடந்த மாதத்தில் மாநகராட்சி மேயர் வார்டில் குடிநீர் தட்டுப்பாடு என பொதுமக்கள் காலி. குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே போல மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீருக்காக போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 32, சேரன் மாநகர் பகுதியில் மாதம் இரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வருகின்றனர்.அதே போல சேரன் மாநகர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.அவன்யூ குடியிருப்பிற்கு இன்று குடிநீர் திறந்து விடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் வழங்கப்பட்ட குடிநீர் முற்றிலுமாக மண் துகள்கள் நிறைந்த குடிநீராக வழங்கப்பட்டுள்ளது.குடிநீரால் நோய் பரவும் அபாயம் உள்ள சூழலில் சுத்தமான குடிநீரை மாநகராட்சி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மாதம் 5 முறையாவது குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.