சரக்கு ஆட்டோ மீது மோதிய கார்- நடு ரோட்டில் தலை குப்புற கவிழ்ந்த கார்-பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் சாமிதாஸ்(தேவாலய பாஸ்டர்) என்பவர் காரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ.காலனி கேட் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. மேலும் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்த்த கட்டிட தொழிலாளியான சக்திவேல் என்பவர் மீதும் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த நபரும் காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.coimbatoreTimesXP TamilUpdated: 3 Jun 2023, 1:56 pm