கோவையில் சிறுமி முகத்தில் கேக் பூசி அடாவடி : சிறுவன் உட்பட 4 பேர் கைது!
1040 views
Subscribe கோவை videosகோவையில் சிறுமியின் முகத்தில் கேக் பூசி அடாவடி செய்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கோயில் முன்பு சில வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக தெரிகிறது. அவர்கள் சிறுமியை பார்த்தவுடன் அவரை கிண்டல் செய்து, அவரது முகத்தில் கேக் பூசி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலர் சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சிறுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சிறுமியிடம் அடாவடியில் ஈடுபட்டது குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்த பெயிண்டர் அபிஷேக் (21), அவரது தம்பி நகைக்கட ஊழியர் சஞ்சீவ் (19), குனியமுத்தூர் குட்டப்பன் கடை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.