யோகாவில் சாதனை செய்து அசத்தல்!
யோகாவில் சாதனை செய்து அசத்தல்!
கோவையை சேர்ந்த 50வயதை கடந்த பெரியவர்கள் உட்பட 10 பேர் சர்வதேச யோகா போட்டியில் தங்கம்,வெள்ளி பதக்கங்களை வென்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.நவீன வாழ்க்கை முறை அழுத்தங்களில் இருந்து விடுபடவும், உடல் மற்றும் உள்ளம் நலம் பெறவும் யோகா பயிற்சகள் வழிவகை செய்கிறது. இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் யோகா குறித்த விழிப்புணர்வு பரவியுள்ள நிலையில்,சர்வதேச அளவில் யோகா போட்டிகளும் அதிகம் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இது போன்ற போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தங்கம்,வெள்ளி போன்ற பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள்,பெரியவர்கள் என அண்மையில் துபாயி்ல் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவிகள்,50வயதுக்கு மேற்பட்டோர் என பத்து பேர் பதக்கம் வென்று திரும்பியுள்ளனர்..சாதனை குழந்தைகளின் யோகா சாதனைக்கு தூண்டுகோலாக இருந்த பயிற்சியாளர்கள் கூறுகையில், கல்வியில் சிறந்து விளங்கவும், ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கவும் யோகா கற்பது அவசியம் எனவும்,மேலும் இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த ஆர்வம் அதிகரிப்பதாக தெரிவித்தனர்…துபாயில் வென்று கோவை திரும்பிய வெற்றி குழுவினருக்கு,பல்வேறு அமைப்புகளின் பாராட்டுதல் உள்ளிட்ட அங்கீகாரங்களையும் இவர்கள் பெற்று வருவது குறிப்பிடதக்கது..Updated: 16 May 2023, 12:38 pm