ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5வயது சிறுவன்!
1052 views
Subscribe கோவை videosஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என தாய் தந்தையர் கண்டித்ததால் சிறுவன் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் அதிகமாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ அமைப்புகள் போலீசார்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவை காந்திமாநகர் பகுதியில் சேர்ந்தவர் தாஸ்,சுந்தரி ஆகியோரின் மகன் 5 வயது சிறுவன் ஜாய்ஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறு சைக்கிள் ஓட்டி வருவது வழக்கம்.இதில் அவரது தந்தை,தாயார் ஹெல்மெட் போட்டு கொண்டு தான் வண்டி ஒட்ட வேண்டும் என கண்டிப்புடன் கூறி உள்ளனர்.அதனால் அந்த சிறுவன் சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மெட் போட்டு கொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக செயல்பட்டு வருகிறார். இதனை அந்த பகுதி பொது மக்கள் அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..