பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்- கோவை மாவட்டம் 93.49% பெற்றுள்ளது!
1052 views
Subscribe கோவை videosதமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதத்தில் அடிப்படையில் 91.39% ஆகும். கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 256 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் 37 ஆயிரத்து 637 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 93.49% ஆகும். இதில் அரசு பள்ளிகளை பொருத்தவரை 88.23% தேர்ச்சி பெற்றுள்ளது.