சித்திரைத் திருவிழாவுக்கு மானாமதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
மானாமதுரையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றை சுத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருகிற 25ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க இருக்கிறது. மதுரைக்கு சித்திரை திருவிழாவுக்கு நிகழ்வு நிகராக அடுத்து மானாமதுரையில் பத்து நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 25ம் தேதி ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது அதனை முன்னிட்டு கோயிலுக்கு எதிர் புறமுள்ள வைகை ஆற்றில் கலை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு விளையாட்டுகள் அதிக அளவில் நடைபெறும் சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஏராளமானோர் தினம்தோறும் பங்கேற்பார்கள் அதனால் கோயில் எதிர்புறம் உள்ள வகையை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வாரமாக செய்து வருகிறது அந்தப் பணிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்tamilnaduTimesXP TamilUpdated: 20 Apr 2023, 1:10 pm