ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல்!
1002 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை 12.5.2023 ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய வந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவம் அடைந்த அய்யாபட்டி கிராம பொதுமக்கள் இன்று நத்தம் பேருந்து நிலையம் உள்ள ரவுண்டா அருகில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்கள் சிறுவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.