மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா
1049 views
Subscribe தமிழ்நாடு videosதமிழக கேரள வணிக எல்லையில் அமைந்துள்ளமங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு தமிழகம் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வந்து தரிசனம் செய்தனர்.ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது, தமிழக கேரளா வன எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா. வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.பக்தர்கள் குமளியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும்,.குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் அருகே பளியங்குடி பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் ஜீப் மூலமும் நடந்தும் நடந்தும் கோவிலை சென்றடைந்து தரிசனம் செய்தனர்.கோயில் வளாகத்தில் பெண்கள் கண்ணகிக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் மருத்துவம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் செய்திருந்தன.கண்ணகி கோவில் வளாக பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்களின் வசதிக்காக மலை ஏறவும் மலை இறங்கவும் என ஒரு மணி நேரம் தரிசன நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது.கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.தமிழகம் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் மலையேறி வந்த ஆயிரக்கணக்கான பபலநீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இரு மாநிலங்களைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.