அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர்
1037 views
Subscribe சென்னை videosஅதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் பால் குட ஊர்லம் நடைபெற்றது. குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏக்கள் பழனி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பெண்களுடன் சேர்ந்து பால் குடங்களை சுமந்து சென்று குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு நடந்து சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பால்குட ஊர்வலத்தில் கலந்து கொள்ள 568 பெண்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆர்வத்துடன் பெண்கள் அதிகளவில் வந்ததால் வந்த பெண்களை திருப்பி அனுப்ப கூடாது என உடனடியாக கூடுதலாக பால் குடங்களை ஏற்பாடு செய்து எடுத்து வரப்பட்டு பக்தர்கள் பால் குடங்களை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.