டிஆர்பி ராஜா பதவியேற்புமன்னார்குடி திமுக எம்.எல்.ஏ மூன்றாவது முறையாக பதவி வகித்து வரும் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவிற்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதையடுத்து ஆளுநருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்த டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்தார்.