அவசர அவசரமாக கல்வெட்டை புதிப்பித்த அதிமுகவினர்!
1028 views
சப்ஸ்கிரைப் chennai வீடியோஸ்எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக நிர்வாகிகள் கல்வெட்டில் அவசர அவசரமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி என பெயர் மாற்றம் செய்து புதுப்பிப்பு...எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் காலை முதலே அண்ணா , MGR திரு உருவ சிலைகள் அருகே மற்றும் பேருந்து நிருத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிருத்தம் அருகே அருகே அதிமுக பகுதி கழக செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில்அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பெயர் பதித்த கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு நிறுவப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக துணைச்செயலாளருமான. ப.தன்சிங் கொடியை ஏற்றினார். பின்பு அங்கு இருந்த பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.