திமுக எம்.பி கனிமொழி தலையிருந்த பூவினை எடுத்துவிட்டு அன்பை பொழிந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு
கலைஞர் நூற்றாண்டு தினத்தை குறிக்கும் வகையில் 100 போட்டோ 100 அடியில் பேனர் வைத்து கவனத்தை ஈர்த்த அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கலைஞர் நூற்றாண்டு விழாவாக இந்த வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தநிலையில் ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி மற்றும் தமிழக இயல் இசை நாடக கழகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் துரை. வீரமணி தலைமையில் அண்ணா பூங்காவில் 100 கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் திமுக துணை பொது செயலாளரும் எம்.பியுமான கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மேலும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,வாகை.சந்திரசேகர்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதற்காக ஊராட்சி மன்ற தலைவர் துரை. வீரமணி என்பவர் கலைஞர் சிறு வயது முதல் தோனி சந்திப்பு வரையிலான அரிதான சுவாரசியமான 100 புகைப்படங்கள் அச்சடித்து 100 அடி பேனரினை வைத்திருந்தது அங்கு வந்திருந்த பொதுமக்கள் உள்பட அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தது.நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த எம்.பி கனிமொழிக்கு பொய்க்கால் குதிரை கலைஞர்கள், பறை இசை கலைஞர்கள் ஆகியோர் மலர்களை தூவிஉற்சாக வரவேற்பு அளித்தனர்.விழா மேடை வரை வழி நெடுகிலும் பூக்களை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனால் கனிமொழி அவர்கள் தலையில் பூக்கள் நிறைந்திருந்தன தலையில் பூக்களுடன் இருந்த கனிமொழியை கண்ட எம்பி டி.ஆர் பாலு தலையிலிருந்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து அன்பை பொழிந்தார்.இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுchennaiTimesXP TamilUpdated: 7 Jun 2023, 5:54 pm