செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
1050 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் அருகே ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையை இன்று காலை வழக்கம் போல கடையைத் திறந்து உள்ளே பணி செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு விளக்கம் கேட்பது போல் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் சுற்றி முற்றி பார்த்தவர் உள்ளே இருந்த நபர் தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றவுடன் டேபிளில் வைக்கப்பட்டிருந்த செல்போனை வெளிப்புறம் இருந்த பலகையை தூக்கி சட்டென அதனை கையில் எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பின்னர் தம் கொண்டு வந்திருந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விரைவாக தப்பி சென்றார். இந்நிலையில் அந்த நபர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.