மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதமானதுமேகதாது அணை கட்டுவேன் என கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு சட்ட விரோதமானது. நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். என மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் பேட்டிதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்துவிவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார் அப்போது காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என அதற்கான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனதுறை அமைச்சரும் கர்நாடக துணை முதலமைச்சராகிய சிவக்குமார் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்க கூடியது. இந்த அறிவிப்பானது சட்ட விரோதமானது அரசியலமைப்பு சட்டத்தை குழி தோண்டிபுதைப்பதற்கு சமமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை குழி தோண்டி புதைப்பதற்கு அவமதிப்பதற்குசமமான வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்துஉரிய விளக்கம் கேட்க வேண்டும் தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் , கர்நாடக துணை முதலமைச்சர் நீர் பாசன துறைக்கு பொறுப்பேற்றுஇருக்கிற சிவகுமாரை நேரடியாக சந்தித்து இது குறித்துபேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகிஇருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி பேச்சு வார்த்தை என்பது சட்டப்படி பெற்றிருக்கிறகாவிரி உரிமையை குழி தோண்டி புகைப்பதற்கு சமம்ஆகும் எனவே அப்படி எந்த பேச்சு வார்த்தையும் கர்நாடகம் தமிழகம் இடையே நடைபெறுவதை விவசாயிகள்அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கிறோம் சட்டப்படி பெற்ற உரிமை கடந்த அதிமுக ஆட்சியில்காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல்உச்ச நீதிமன்றம் உத்தரவு கிடைக்காமல் மேகதாதுவில் அனை கட்ட முடியாது என 2022 -ல்கர்நாடகமாநில பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பசவராஜ்பொம்மை பகிரங்கமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்அணையை கட்ட வேண்டும் என்று 15 தினங்கள் பிரதமரையும், காவிரி மேலாண்மை ஆணையையும் சந்தித்து பேசியநிலையில் காவிரி மேகதாது அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்கிறேன் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய அனுமதி இல்லாமல் அனையை கட்ட முடியாது என பகிரங்கமாககர்நாடக சட்டப்பேரவை கூட்டத்திலேயே பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். இந்த நிலையில்புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார் சட்ட விரோதமாக அறிவிப்பதை தமிழக அரசு வன்மையாககண்டிக்க முன்வர வேண்டும் எந்த சமரசத்திற்கும் தமிழக அரசு இடமளிக்க கூடாது என்பதை கண்டுப்புடன்தெரிவித்துக்கொள்கிறோம் தமிழக அரசு நிதானத்தோடு தலையிட்டு செயல்பட வேண்டும். கூட்டணி என்கிற பெயரால் உறவு என்கிற பெயரால் அண்டைமாநில உறவு என்கிற பெயரால் எந்த விதத்திலும் தமிழ்நாடு அரசு பெற்று இருக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதை தமிழக விவசாயிகள் அனுமதிக்கமாட்டோம் என எச்சரிக்கிறோம் தேவையானால் விரைந்து விவசாயிகள் சார்பில் காவிரி மேலாண்மை ஆனையத்திலும் உச்சநீதிமன்றத்திலும் இந்த நடவடிக்கை குறித்து முறையிட தயங்கமாட்டோம்என தெரிவித்தார்.