நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் கைது!
1035 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக எஸ்பி ஹர்ஷ்சிங் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பவரது வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து ராகுலை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் ராகுலின் சகோதரர் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வரும் இவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார். இதனை அழகு செடியென நினைத்து வீட்டில் உள்ளவர்கள் வாசலில் போற்றிகோவில் வைத்த போது தான் வெளியே தெரிய வந்துள்ளது. விதையை எடுத்து வந்து வளர்த்த பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர். நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.