கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி
1029 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோடை விழா துவங்கியது, 8நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் தினந்தோறும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது, இதனையடுத்து 7வது நாள் கோடை விழாவில் முக்கிய நிகழ்வில் ஒன்றாக நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடத்தப்பட்டது, இதில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக தமிழக அரசின் திட்டங்கள் அமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது,சுற்றுலாத்துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரியம் விளையாட்டான ஜல்லிகட்டில் காளையை அடக்குவது போன்று காட்சிபடுத்தப்பட்டது, தோட்டக்கலை துறை சார்பாக மலர்களால் ஸ்பைடர் மேன் வடிவமைக்கப்பட்டது, மீன்வளம் துறை சார்பில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவகைள் காட்சிபடுத்தப்பட்டது, இதில் ஊரக வளர்ச்சி துறை முதல் பரிசையும், சுற்றுலாத்துறை இரண்டாம் பரிசையும், தோட்டக்கலைக் துறை மூன்றாம் பரிசும் சுற்றுலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது,இதன் முன்னதாக இந்த விழாவை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்,இந்த படகு அலங்கார போட்டியை சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து கண்டு ரசித்தனர், மேலும் காளையை அடக்குவது போன்று காட்சிபடுத்தியது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.