இதென்னடா..போலீசுக்கு வந்த சோதனை!கைது செய்யப்பட்ட பிஜேபினரை தங்க வைக்க மண்டபம் கிடைக்காத்தால் பேருந்தில் வைத்தே சுற்றிய போலிசார்: இடையில் பேருந்து பிரேக் டவுன் ஆனதால் பேருந்தை தள்ளிய போலீசார்: பேருந்தில் இருந்தபடி தள்ளு , தள்ளு, என போலிசாரை நக்கலடித்த பிஜேபியினர்நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை , ஒரத்தூருக்கு இடம் மாற்றுவதை கண்டித்து பாஜகவினர் இன்று நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பாஜகவினரை அரசு பேருந்தில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தனியார் திருமண மண்டபங்கள் கிடைக்காத காரணத்தினால் மூன்று முறை புதிய பேருந்து நிலையத்திற்கு பழைய பேருந்து நிலையத்திற்கும் பேருந்து சுற்றி சுற்றி வந்தது. ஒரு வழியாக தங்க வைக்க மண்டபம் கிடைக்க அங்கு பேருந்து செல்ல அறிவுறுத்தினர். தனியார் மண்டபத்திற்கு செல்லும் வழியில் திடீரென பேருந்து நடு வழியில் நின்றது. தொடர்ந்து பாதுகாப்பு வந்திருந்த போலீசார் பேருந்தை இறங்கி தள்ளினார். அப்போது பேருந்தில் இருந்தபடி பிஜேபியினர் இறங்க மறுத்து தள்ளு , தள்ளு, என போலிசாரை வடிவேல் பட பாணியில் நக்கலடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் பேருந்து தள்ளி ஸ்டார்ட் செய்து மண்டபத்திற்கு பாஜகவினரை அழைத்துச் சென்று அடைத்தனர்.