பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பானை நாட்டைச் சேர்ந்தவர் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடத்தினர்!
1035 views
Subscribe தமிழ்நாடு videosபழனி தண்டாயுதபாணி சுவாமியை நவபாஷண சிலையை உருவாக்கியவர் போகர் சித்தர் அவர்கள் அவரின் சீடரான புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ஆசிரமம் சார்பில் பழனி மலைக்கோவிலில் வருடம் தோறும் கொண்டாடப்படும் போகர் ஜெயந்தி விழா 18ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது.இதில் விலைமதிப்பற்ற பச்சை மரகதலிங்கத்திற்கும் ,போகர் பெருமான் வழிபட்ட புவனேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அர்ச்சனை அபிசேக பூஜைகள் நாளை மதியம் 11 மணியளவில் துவங்கி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த பாலகும்ப குருமுணி ஆதீனம் தலைமையில் ஆன்மிக குழு ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு விஜயம் செய்து வருகின்றனர். அதன்படி பழனி போகர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு பங்கேற்பதற்காக இன்று புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகம் உலக மக்கள் அமைதிக்கும் சிறப்புக்கும் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.