லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி மின் பொறியாளர் வீட்டின் மேல் செல்லக்கூடிய மின் கம்பியை அகற்றி மாற்றி அமைக்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவருக்கு சொந்தமான வீட்டு மனையில் மாடி வீடு கட்டி வருகிறார் இவரது வீட்டின் மாடி மேல் மின்சார கம்பி செல்வதால் வீடு கட்ட முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டார் இந்த நிலையில் மின்சார கம்பியை அகற்றுவதற்கு வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று புகார் செய்துள்ளார் அப்போது உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் மின் ஒயர் அகற்றுவதற்கு 50000 கொடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் கடந்த மார்ச் மாதம் சக்திவேல் 50,000 கொடுத்துள்ளார்இந்த நிலையில் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் பணம் வாங்கியும் மின் கம்பியை அகற்றாமல் சக்திவேலை அழக்களித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக சக்திவேல் பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டபோது மின் ஒயர் அகற்றுவதற்கு 2000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதனால் மன வேதனை அடைந்த சக்திவேல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்தார் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 2000 ரூபாய் நோட்டை சக்திவேலிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர் அப்போது சக்திவேல் 2000 ரூபாய் நோட்டை உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மீன் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் விசாரணை செய்து 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்tamilnaduTimesXP TamilUpdated: 25 May 2023, 8:14 pm