ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!
1020 views
Subscribe தமிழ்நாடு videosசிவ புண்ணிய சீலர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் உறைவிடமானதும் கடைச்சங்க காலத்திலிருந்து வரலாற்றுச் சிறப்புடன் விளங்கும் சிவகங்கைச் சீமையில் இருக்கும் ஓக்கூரில் ஏறக்குறைய 328 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபாட்டில் இருந்து ஒக்கூர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் முறையாக பூஜைகள் நடத்தப்பெற்று வந்த ஸ்ரீ சசிவர்ண விநயாகர் திருக்கோவிலில் முன் மண்டபம் கன்னி மூலை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் லெக்ஷ்மி துர்க்கை தட்சணாமூர்த்தி பைரவர் நால்வர் துவாரபாலகர் சந்திரன் சூரியன் ஆகிய விமானங்களுடன் கூடிய கோபுரங்கள் மூன்று நிலை ராஜ கோபுரம் வசந்த மண்டபம் சுற்றுப் பிரகாரம் அனைத்தும் புதுப்பிக்கப் பெற்று கோவிலில் உள்ள புரதான கால ஓவியங்கள் மூலிகை வண்ணங்காளல் புதுப்பிக்கபெற்று புதுப்பொலிவுடன் திகழும் இக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நடைபெற்றது விக்னேஸ்வர பூஜையுடன், புண்யாஹவாசனம், ஆறாம் கால யாகபூஜைகள் நடத்த பட்டுமஹாபூர்ணாஹுதி, தீபாராதனை, உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற் று, ஸ்ரீ சசிவர்ண விநாயகர் ஆலய விமானம் மற்றும் ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை நகரத்தார் திருப்பணி செய்திருந்தனர்