வனப்பகுதியில் மானை வேட்டையாடிய மூன்று பேரை கைது!
1054 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான். . யானை .குரங்கு.பறக்கும் அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கிராமம் புல்லாவெளி பகுதியில் வனத்துறை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது வனத்துறையினரை கண்டுஏழு பேர் ஓடி உள்ளனர் அவர்களைப் பிடிக்க வனத்துறவையினர் முயன்ற போது வனத்துறையினரிடம் மூன்று பேர் மட்டுமே சிக்கினார் வனத்துறையினர் விசாரணை செய்த பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆண் கடமான்ஒன்று வேட்டையாடியது தெரிய வந்தது வன உயிரினக்குற்றம் பதிவு செய்யப்பட்டு மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம், ரஞ்சித், மதன்குமார் ஆகிய மூன்று நபர்களை கைது செய்துள்ளனர் அவர்களிடம் இருந்ங வேட்டையாடியதற்கு பயன்படுத்திய ஐந்து நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது கைது செய்யப்பட்ட மூவரும்.ஆத்தூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி பழனி சிறைச்சாலையில் அடைத்தனர் மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தப்பி ஓடிய நான்கு குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.