திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
Subscribe தமிழ்நாடு videos
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக திருமதி மகேஸ்வரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். இவர் தற்பொழுது திண்டுக்கல் RM காலனி 1வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இன்று 23.06.23 காலை அவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு DSP நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே சென்னையில் உள்ளாட்சி நடுவர் மன்ற தீர்ப்பானையத்தின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் ஏற்கனவே பணிபுரிந்த இடங்கள் மற்றும் அவரது திருப்பூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்