இரண்டாம் நாளாக நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!
1003 views
Subscribe தமிழ்நாடு videosதமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 2-வது நாளான இன்று மாவட்டத்தில் உள்ள 1599 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து நாமக்கல் ஆட்சியாளர் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் வருகையின் அடிப்படையில் அங்கன்வாடி பிரதான மையங்களை, மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்களோடு இணைப்பதையும் கைவிட வேண்டும், ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து தொடர்ந்து தமிழக முழுவதும் அங்கன்வாடி ஊழியர்களின் இரண்டாம் நாள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து நாமக்கலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வந்த போராட்டத்தில் வாபஸ் பெற்று அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.