இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாக கூறி பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!
1016 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாநகராட்சி உள்ள ஸ்ரீ வாசவி தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக கல்வித்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் பழனி கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் நிலக்கோட்டை நத்தம் குஜிலியம்பாறை உள்ளிட்ட பத்து தாலுகாவில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி உள்ள தனியார் பள்ளிக்கு வந்து விட்டனர் ஆனால் ஏற்பாடு செய்ய வேண்டிய திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் அதன் பிறகு ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் தொடர்பு கொண்ட பொழுது உடனடியாக கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறி காலதாமதம் செய்தும் அதேபோல் கலந்தாய்வு ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இடமாறுதல் இருப்பதாக தெரிவித்துள்ளனர் அதேபோல் ஆசிரியர்கள் அனைவரும் வெளியே இருந்த போது அங்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடம் மாறுதல் உள்ளதாக பெயர் பலகையில் கடிதம் ஒட்டி விட்டு உள்ளே சென்றவுடன் இடமாறுதல் அனைத்தும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளதால் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தவுடன் கலந்தாய்வில் மிகப்பெரிய குழப்படியும் மோசடியும் நடைபெறுவதாகவும் பல்வேறு இடமாறுதல்களை தெரிவிக்காமல் மறைத்து வைத்துள்ளனர் என்று கூறி இடம் மாறுதலுக்காக காலை 9 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இருந்து பொறுமையில் அந்த பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் நேரடியாக வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மேலும் தற்போது வரை பட்டதாரி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் இருந்து கலைந்து செல்லவில்லை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று குறி பள்ளியிலேயே அமர்ந்துள்ளனர்