அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா
1051 views
Subscribe தமிழ்நாடு videosஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் நேற்று பீமன் துரியோதனனை வதம் செய்து, துரியோதனனின் உதிரத்தை எடுத்து திரௌபதியின் கூந்தலில் எண்ணெயாக தடவி சபதத்தை நிறைவேற்றிய பீமன்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அலகு நிற்க வைத்து பூஜைகள் செய்து அன்று முதல் திரௌபதி அம்மன் ஆலயம் முன்பு மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தன.மேலும் நாடகக் கலைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தன.நேற்று மகாபாரத இறுதிப் போரில் துரியோதனனை பீமன் வதம் செய்து துரியோதனனின் உதிரத்தை எடுத்து பாஞ்சாலியின் கூந்தலில் தடவி பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்றும் நிகழ்வு நாடக கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது.இந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று கண்டு களித்தனர்.இறுதியாக துரியோதனன் இறந்த பின்பு துரியோதனனின் உடலை பார்த்து துரியோதனன் மனைவி காந்தாரி ஒப்பாரி வைத்து ஒப்பாரி பாடல் பாடியவாறு துரியோதனன் சிலையை சுற்றி வரும் சம்பவம் நாடக கலைஞரால் அரங்கேற்றப்பட்டன.