கோடை மழை அடுத்து முன் பட்ட குருவை சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
1043 views
Subscribe தமிழ்நாடு videosதமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த 4 தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது இதன் காரணமாக திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், போலகம் ,குருவாடி, கணபதிபுரம்,வவ்வாலடி, ஏனங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் முன் பட்ட குருவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது கோடை உழவு செய்வது, வரப்புகளை சீரமைத்தல், நாற்று விடுதல்,டிராக்டர் மூலம் உழவு அடித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர் அதே சமயம் குருவை சாகுபடிக்கு தேவையான உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வைகளை தட்டுப்பாடு இன்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள் தொடர்ந்து குருவை சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.