திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
Subscribe தமிழ்நாடு videos
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில், தமிழகத்தில் சொத்து வரி, பால் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் டி டி வி குமார், வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவில் சம்பத்குமார் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..