அறிவிப்பின்றி சாலையில் வேகத்தடை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை:பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அடுத்த லக்கி நாயக்கன்பட்டி கூட்ரோடு அருகே நேற்று இரவு திருப்பத்தூர் நோக்கி சென்ற மேற்குபதனவாடி பகுதியைச் சார்ந்தவர் சூர்யா(23) இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனது தாயார் சிவகாமியுடன் திருப்பத்தூர் நோக்கி வந்த போது மண்ணால் ஏற்படுத்தப்பட்டிருந்த வேகத்தடை மீது வேகமாக மோதியதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதத்தில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அவரது தாயார் சிவகாமி பலத்த காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவை தொடர்ந்து சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிப்பின்றி வேகத்தடை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விரைந்து வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் சமரசத்தை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.tamilnaduTimesXP TamilUpdated: 31 May 2023, 12:56 pm - TimesXP Tamil
- tamilnadu
- Action Against People Who Set Speed Limits On The Road Without Notice: Public Road Block Suddenly!