தீ தொண்டுனால் வாரத்தை முன்னிட்டு இருசக்கர மோட்டார் வாகன பேரணி
1031 views
Subscribe தமிழ்நாடு videosதமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டுனால் வாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டுனால் வாரத்தை முன்னிட்டு மீட்பு பணிகளின் போது தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இரு சக்கர மோட்டார் வாகன பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மியூசியம் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த இருசக்கர மோட்டார் வாகன பேரணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடை அணிந்து அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த பேரணி பால் பண்ணை திலகர் திடல் மேல ராஜா வீதி பழைய அரசு தலைமை மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று பின்னர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறம் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது.