பாரம்பரிய மீன் பிடி திருவிழா-ஏராளமானோர் பங்கேற்று மின்களைப் பிடித்து சென்றனர்!
1022 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தின் துவக்கத்தில் நடத்தப்படும் பிரம்மாண்டமான மீன் பிடி திருவிழாவில். வழக்கம் போல் திருப்பத்தூர், SS.கோட்டை, காளாப்பூர், முறையூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள 20ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி 200 ரூபாய் கட்டணம் செலுத்தி மீன்களைப் பிடித்தனர். கச்சா, ஊத்தா ஆகிய உபகரணங்களை கொண்டு கட்லா, ரோகு,மிருகால், சிசி கெண்டை, ஜிலேபி, விரால், கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர்.மீன்கள் ஏராளமாக கிடைத்ததால் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்கும் காட்சியை சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கூடி நின்று கண்டு ரசித்தனர்.