ராசிபுரம் அருகே 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை பிறந்த ஊருக்கு அர்பணித்த விஞ்ஞானி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்மணி அவரது மனைவி ரத்தின லீனா(கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்) குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி என்ற மகனும் இவர் அமெரிக்காவில் இராணுவ அதிகாரியும்,கீதா என்ற மகள் அமெரிக்கா ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கட் மணி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்காவில் சொந்தமாக கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில் தான் பள்ளி படிப்பில் மற்றும் கல்லூரியில் நன்றாக படித்ததன் மூலம் அமெரிக்காவுக்கு சென்று வேலை செய்து வந்ததாகவும் படிப்பின் மூலம் வாழ்வில் அனைவரும் உயர்வதற்காக தான் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 1000 சதுர அடியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டினை கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீட்டினை மாணவ மாணவிகளுக்கு அர்ப்பணித்தனர். மேலும் புதிய வீட்டிற்கு அவரது மனைவி ரத்தின லீலா நூலகம் என பெயர் சூட்டி வீட்டினுள் நூலகம் மற்றும் அரசு தேர்வு மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் அமைத்து மாணவ மாணவிகளை வழங்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலம் மாணவ மாணவிகள் கல்வி திறனை அதிகரித்து முன்னேறுவதர்க்கு வழிவகத்திட வகையில் செய்ததாகவும் கூறினார்.tamilnaduTimesXP TamilUpdated: 6 Jun 2023, 1:15 pm