சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு!
1006 views
Subscribe தமிழ்நாடு videosநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்ட மலை பகுதியை சேர்ந்தவர் ரவி.,கட்டுமான தொழிலாளியான இவர் எம்ஜிஆர் நகரில் கூலிபணம் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மோதியதில்.,தலையில் பலத்த காயமடைந்து கட்டுமான தொழிலாளி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் உயிரிழந்த வரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து வாகன விபத்து நிகழ்வதால் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.