பழனியில் மின் கம்பம் மீது கார் மோதி மின்கம்பம் சேதம்!
Subscribe தமிழ்நாடு videos
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காரமடை பேருந்து நிறுத்தம். இங்கு பழனி கோவிலுக்கு சொந்தமான யானை பாதுகாப்பு இடம் அமைந்துள்ளது இதற்கு முன்பாக நேற்று இரவு பெய்த பலத்த மழையில் வந்த கார் ஒன்று பேருந்து நிறுத்தம் முன்பாக இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து காரும் சேதமானது, காரை ஓட்டி வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் ,மின்கம்பம் மீது கார் மோதியதில் சேதம் அடைந்ததில் நள்ளிரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர், இது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் உரிமையாளர் யார் என்ற விபரத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.