சின்னாளபட்டியில் 96 வது சித்ரா பௌர்ணமி திருவிழா!
1037 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 96 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து கடந்த நான்கு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளும், சுவாமி சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று இரவு மச்ச அவதாரம், கூர்ம் அவதாரம், தசாவதாரம் உள்ளிட்ட 9 அவதாரங்களை எடுத்து கடைசியாக சுவாமி கள்ளழகர் அவதாரம் மேற்கொண்டு காமயசாமி கோவிலில் இருந்து பிருந்தாவன தோப்பிற்கு சென்றது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். 100 கிலோ பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பள்ளக்கில் கள்ளழகர் பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி பூப்பழக்கில் கள்ளழகர் சென்றார். தொடர்ந்து பிருந்தாவன தோப்பில் உள்ள ஸ்ரீ ராம அழகர் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைந்தார். இதில் கூடியிருந்த பக்தர்கள் கள்ளழகரை சுமந்து வந்த பல்லக்கின் பாகங்களை உடைத்து எடுத்து அதனை தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்க எடுத்துச் சென்றனர். அடுத்த ஆண்டு வரை வைத்திருந்தால் தங்கள் வீடுகளில் அனைத்துவித சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அரிசி புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. கள்ளழகர் காமயசாமி கோவிலில் இருந்து பூப்பல்லத்தில் பிருந்தாவனத்தை அடைதல் நிகழ்ச்சியுடன் சின்னாளப்பட்டியில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சித்திரை திருவிழா நிறைவடைந்தது. கள்ளழகரை பூப்பல்லக்கில் தரிசிக்க 3000-க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டனர்.