4000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் மற்றும் கற்கால சின்னங்கள் கண்டுபிடிப்பு
1051 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது ஆசாரிப்புதூர் கிராமம். இந்த கிராமத்தின் அருகே உள்ள மலைக்குன்றின் மீது பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மல்லீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.இந்தக் குன்றிலிருக்கும் பாறைகளில் பழங்கால தமிழ் கல்வெட்டுக்களும், கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தை சேர்ந்த சின்னங்களும் இருப்பது தெரியவந்தது. மேலும் குன்றின் அடிவாரத்தில் நுழைந்தான் பாறை என்னும் சிறுபாரையின் கீழ் கற்காலத்தை சேர்ந்த ஒரு ஈமக்கல் திட்டை ஒன்றும் உள்ளது. மேலும் அங்குள்ள பாறையின் மேல் 300 ஆண்டுகள் பழமையான கல் ஒன்றில், சூரியன் சந்திரன் உருவமும் அதன் கீழ் சிவலிங்கம் மற்றும் நந்தி உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கள் ஆயுதங்கள், இரும்பை உருக்கிய பாறை கற்களும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றின் அருகே பழமை வாய்ந்த நீதிபரிபாலன கல்வெட்டும், சங்க காலத்திற்கு முன் இறந்தவர் நினைவாக வைக்கப்படும் கல் குதிர்களும் மலையை சுற்றி குவியலாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள உள்ள பாறைகளில் ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த வரலாற்று ஆய்வாளர்களான விஸ்வநாததாஸ், சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்தபோது அது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தெரியவந்தது.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாறையில் தமிழில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அப்பகுதியில் உள்ள சிற்பங்களையும், கோவில்களையும் தீவிர ஆய்வு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.