2 வீடுகளின் கதவை உடைத்து 100 சவரன் கொள்ளை
1044 views
Subscribe தமிழ்நாடு videosநாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாதிரிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (59). இவர் ஜவுளிக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி வசந்தா என்ற மனைவியும், விஜய கிருஷ்ணா என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணனின் மகள் பவித்ராவுக்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேலத்திற்கு பட்டுப் புடவை எடுக்க சென்று இருந்தனர். அப்போது கிருஷ்ணனின் மாமனார் பழனிசாமி வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மதியம் பழனிசாமி, ஊருக்குள் இருக்கும் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் 3 மணியளவில் தனது மகளின் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த மற்றொரு அறையின் கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது.மேலும் பீரோவில் இருந்த ஆடைகள் அனைத்தும் கலைந்து கிடந்ததோடு, நகைகள் திருடு போயிருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணனின் குடும்பத்தார் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தனர்.அப்போது செயின்கள், தோடுகள், வளையல், மோதிரங்கள் என சுமார் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. பின்னர் தொழிலதிபர் கிருஷ்ணன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.இதேபோல் நவனி பள்ளிப்பட்டி பகுதியில் பலகார வியாபாரியான அன்பழகன் வீட்டிலும் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இரவு வீட்டிற்கு வந்த அன்பழகனின் மூத்த மகன் கவுதம் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வியாபாரி அன்பழகன் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.அதைத்தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்த இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.