மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது வைரலாகும் வீடியோ!கேரள மாநிலம் கொட்டார கரையில் டாக்டர் வந்தனாதாசை சிகிச்சைக்காக வந்தவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி முடியும் முன்பு மருத்துவரை நோயாளி தாக்கியதாக மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் காயம் அடைந்த வட்டே குந்நு பகுதியை சார்ந்த டோயல் என்பவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது திடீரென ஏற்பட்ட வாய் தகராறு திறந்து மருத்துவரை டோயல் தாக்கியதாக தெரிகிறது. போதையில் காணப்பட்ட டூயல் முதலில் மருத்துவமனை ஊழியர்களோடு தகராறு செய்த நிலையில் அடுத்து அங்கு வந்த மருத்துவரோடும் தகராறு ஈடுபட்டுள்ளார் அப்போது திடீரென மருத்துவரின் முகத்தில் தாக்கியுள்ளார் உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது தப்ப முயற்சித்தாலும் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து வைத்திருந்தனர் தொடர்ந்து இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் களமசேரி போலீசார் டோயலை கைது செய்தனர்.