சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் சமீபத்தில் கரையைக் கடந்த நிலையில் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு செலவு செய்ததாகச் சொன்ன 4000 கோடியால் என்ன பயன், என தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.