ஹிந்தி மொழியால் சர்ச்சை.. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி..தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் மக்களிடம் ஒழுங்காக பதில் தெரிவிக்கவில்லை எனவும் மொழியால் அங்கு டிக்கெட் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.