யானையை கண்காணிப்பதில் வனத்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு
1077 views
Subscribe செய்திகள் videosகேரளா மாநிலம் மூணாறு தேயிலை தோட்ட பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற அரிக்கோம்பன் யானை கடந்த 10 தினங்களுக்கு முன் கேரள வனத்துறையினர் பிடிக்கப்பட்டு வண்டிப்பெரியார் அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது அங்கிருந்து அரி கொம்பன் யானை தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளமேகமலை ஆனந்தா எஸ்டேட்டில் முகாமிட்டு இரவு நேரங்களில் மலை கிராமங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அச்சுறுத்துவதாகவும் மாலை நேரங்களில் சாலையில் இறங்கி வாகனங்களை அச்சுறுத்துவதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன் பகுதியில் உள்ள கருப்பு தேவர் காடு என்னும் இடத்தில் குடியிருப்பு வீட்டை சேதப்படுத்தி உள்ளது மேலும் வனத்துறையினர் யானையை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாக யானையைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வனத்துறை மெத்தனம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்....