கன மழை காரணமாக கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்நாகையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புகழ் பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் ஆலயத்திற்குள் நீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்மிக்க எட்டுக்குடி முருகன் கோவில் உட்பகுதி கனமழை காரணமாக வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது இதனால் அங்கு இருக்கக்கூடிய விநாயகர் விஷ்ணு குருபகவான் சிலைகளின் முன் பக்தர்கள் வழிபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது