கின்ஃப்ரா பூங்காவில் பெரும் தீ விபத்து : மருந்து சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்
1066 views
Subscribe செய்திகள் videosகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தும்பா கின்ஃப்ரா பூங்காவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ சேவைக் கழகத்தின் மருந்துக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானது. நள்ளிரவு 1.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் குடோன் வெடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். தீ விபத்தின் போது பாதுகாப்பு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிறிய கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானது.தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஜே.எஸ்.ரஞ்சித் என்பவர் உயிரிழந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் கட்டிடத்தின் ஒரு பகுதி உடல் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார். ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த ரஞ்சித், ஆறு ஆண்டுகளாக தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த கட்டடம் எரிந்து நாசமானது. தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.