வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே உருக்குலைந்து போயுள்ளது. மழை ஓய்ந்தும் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். சென்னைவாசிகள் பாதிக்கப்பட்டோருக்கு ஓடி ஓடி உதவி வருகின்றனர். குறிப்பாக வேளச்சேரி பகுதி அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.