கேரளாவில் டபுள் டெக்கர் படகு விபத்து
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பரப்பனன்குடியில் பொதுமக்களை கவரும் வகையில் சுற்றுலா படகுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இங்கு பாயும் பூரபுழா நதியானது அரபிக் கடலில் சென்று கலக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சுற்றுலா படகுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு அடுக்குகள் கொண்ட டபுள் டெக்கர் படகு ஒன்றில் அதிகப்படியான பயணிகள் ஏற்றி சென்றதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் படகு தண்ணீரில் தள்ளாடியது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். திடீரென அப்படியே கவிழ்ந்து படகு பெரும் விபத்தை சந்தித்தது. இதில் சுமார் 40 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். முதல்கட்டமாக 3 பெண்கள், 4 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடனடியாக தண்ணீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்று காலை நிலவரப்படி 21 பேர் வரை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. பலர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.newsTimesXP TamilUpdated: 8 May 2023, 12:13 pm