சாருக் சைபி தீ வைத்த அதே ரயிலில் நள்ளிரவில் மீண்டும் தீ விபத்து
கேரள மாநிலம் எலத்தூர் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மகாராஷ்டிராவில் செய்த சாருக் சைபி என்ற இளைஞரால் தீ வைக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் , மேலும் பலர் அதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து ஷாருக் சைபியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்த சம்பவம் ஓயாத நிலையில் சாருக் சைபி தீ வைக்கப்பட்ட அதே ரயிலில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது , இதில் ஜெனரல் கோச் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது, அதிர்ஷ்டவசமாக ரயிலில் நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, சாருக் சைபி தீவைத்த அதே ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர், ரயிலில் தடவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் பல வல்லுநர்கள் அழைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மீண்டும் கேரளாவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுnewsTimesXP TamilUpdated: 1 Jun 2023, 12:16 pm - TimesXP Tamil
- news
- Another Fire Broke Out In The Same Train Which Charukh Saibi Set Fire