குமுளி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது!
1040 views
Subscribe செய்திகள் videosகேரள மாநிலம் குமுளி அருகே வல்லாரங்குன்னு பாப்புஜி காலனியில் வசிக்கும் நாகராஜ் என்பவர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக கேரள மதுவிலக்கு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.புகாரின் அடிப்படையில் நாகராஜின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு தயார்படுத்திவைக்கப்பட்டிருந்த ஊரல் இருப்பதை கண்டனர். மேலும் சோதனையின் போது காய்ச்சி எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் சாராயமும் கண்டனர்.50 லிட்டர் ஊரல் மற்றும் ஒரு லிட்டர் சாராயத்தை கைபற்றிய வண்டிப் பெரியார் காவல் துறையினர் சாராயம் காய்ச்சிய நாகராஜை பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீர்மேடு சிறையில் அடைத்தனர்.தமிழகத்தில் சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் சாராய வேட்டையால் கேரள மக்களும் அச்சத்தில் உள்ளனர்.